Thursday, November 12, 2015

மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்!

மியான்மர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாக இருக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் இதுதான் உண்மையிலேயே சுதந்திரமாக நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தல். நாடு முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தது என்பதும், ஒரு சிறிய அசம்பாவிதம் அல்லது வன்முறைச் சம்பவம்கூட நடக்கவில்லை என்பதும் பாராட்டுக்குரியது. 3 கோடி வாக்காளர்களில் 80% பேர் திரண்டு வந்து வாக்களித்தார்கள். கிராமப்புறங்களில் இந்த அளவுக்குப் பரவலாக மக்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் இதுவே முதல்முறை. இதற்காக நாட்டின் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை எடுத்துரைத்த அமைப்புகளும் பாராட்டப்பட வேண்டும். 664 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இடம்பெற 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆங் சான் சூச்சியின் ‘ஜனநாயகத்துக்கான தேசிய லீக்’ (என்.எல்.டி.) கட்சி அமோக வெற்றியுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. மியான்மரின் வெவ்வேறு நிலைகளிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. மியான்மரின் வரலாற்றில் முதல் முறையாக மக்கள் அரசு அமையப் போகிறது. எனினும், அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது ராணுவத்தின் கைகளில்தான் இப்போதும் இருக்கிறது. ஆங்சான் சூச்சி அதிபர் பதவி ஏற்க முடியாத சூழலை அந்நாட்டின் அரசியல் சட்டம் மூலம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டார்கள். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவரை ஆங் சான் மணந்தார். அவருடைய 2 மகன்களும் இப்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களைக் குடும்ப உறுப்பினர்களாகப் பெற்றவர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. ஆங் சானை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தில் இத்திருத்தத்தைச் செய்தது ராணுவ அரசு. ஆனால் நாட்டுக்குள்ளும் சர்வதேச அரங்குகளிலும் அவருக்கு இருக்கும் புகழ், செல்வாக்கு காரணமாக அவருடைய அரசுக்கு ஆதரவும் இருக்கும் என்பது நிச்சயம்.

நாடாளுமன்றத்தின் 664 உறுப்பினர்களில் 25% பேர் ராணுவத்தின் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்க ளுடைய எதிர்ப்புகளைச் சமாளிப்பது ஆங்சான் சூச்சிக்குப் பெரிய சவாலாக இருக்கும். மியான்மரை ஜனநாயக ரீதியாக நிர்வகிப்பது எளிதாக இருக்காது. ஆசியாவின் வறிய நாடுகளில் மியான்மரும் ஒன்று. அரசின் எந்தத் திட்டமும் நாட்டு மக்களில் 3% பேரை மட்டுமே அடைகிறது. ஆயுதம் ஏந்திய வெவ்வேறு இனக் குழுக்கள் அதிகம். மேலும், பவுத்த பெரும்பான்மையினவாதக் குழுக்கள் மதச் சிறுபான்மையோரை அடக்க தொடர்ந்து முற்படுகின்றன. ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். கடந்த தேர்தலில் வாக்களித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மியான்மரின் ஜனநாயக இழிவுகளில் ஒன்று. மியான்மர் நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டியிருப்பதால் பெரிய நிறுவனங்களைத் தங்கள் நாட்டுக்கு அழைத்த அரசால் அவை இயற்கை வளங்களை அழித்துச் சுரண்டுவதைத் தடுக்க முடியவில்லை. உலக அளவில் காடுகள் அழிக்கப்படுவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது மியான்மர்.

புதிதாகப் பதவி ஏற்கவுள்ள அரசு இந்தச் சவால்களைச் சமாளித்தாக வேண்டும். இதுவரை புறக்கணித்துவந்த மியான்மர் மீது இந்திய அரசும் இனி அதிகக் கவனம் செலுத்த வேண்டும்!

Source:Tamil Hindu

813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித் தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்பு வதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு

தமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந் தும் என்பதால் மொத்த காலி யிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.

எழுத்துத் தேர்வு அடிப்படை யில் பணிநியமனம் நடை பெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப் பெண் 300. எழுத்துத் தேர்வுக் கான பாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.

விஏஓ பணியில் சேரு வோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கமான முதலீட்டுத் திட்டங்கள்

வெகு காலமாக யோசனையாகத் தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசாலும் பரிசீலிக்கப்பட்டு, செயல்வடிவில் நிறைவேற்றப்படாமல் இருந்த தங்க முதலீட்டுத் திட்டம் இப்போது அமலுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. தங்கத்தை நாணயமாக விற்பது, வீட்டில் சும்மா வைத்திருக்கும் நகைகளைப் பண மதிப்புக்கு மாற்றிக்கொள்வது, தங்கம் வாங்குவதற்குப் பதில் சேமிப்புப் பத்திரமாகவே வாங்கிக்கொள்வது என்ற 3 திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

அரசுடமை வங்கிகளும் தபால் அலுவலகங்களும் இந்த விற்பனையை இனி மேற்கொள்ளும். ஆண்டுதோறும் சுமார் 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக அரிய அந்நியச் செலாவணியை ஆண்டுதோறும் இழப்பதைத் தடுக்கவும் கையிருப்பில் உள்ள தங்க நகைகளை மறு சுழற்சி மூலம் தேவைப்படுவோருக்கு விற்கவும் இது நல்லதொரு ஏற்பாடு.

மகாத்மா காந்தி, அசோகச் சக்கரம் உருவங்கள் பதித்த தங்க நாணயங்கள் 5 கிராம், 10 கிராம் எடையில் விற்கப்படவுள்ளன. விரைவில் 20 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளும் விற்கப்படும். தேவைப்படும்போது இதை உருக்கி நகைகளாகச் செய்துகொள்ளலாம் அல்லது எடை மதிப்புக்குப் புதிய தங்கம் வாங்கிக்கொள்ளலாம். அவசரத் தேவைக்கு அன்றைய சந்தை விலைக்கேற்ப விற்றுப் பணம் பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டில் வாங்கி வைத்திருக்கும் நகைகளைக் கனிம, உலோக வர்த்தகக் கழகம் (எம்.எம்.டி.சி.) நாடு முழுவதும் திறக்கவுள்ள 125 விற்பனை நிலையங்களில் கொடுத்து உருக்கி, தங்க மதிப்புக்கேற்ப சான்றிதழை வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்துக்கு அதை முதலீடு செய்து ஆண்டுதோறும் 2.5% வட்டி பெறலாம். தேவைப்படும்போது இதைத் தங்கமாகவோ, அன்றைய விலை நிலவரப்படி பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம்.

புதிதாகத் தங்கம் வாங்குவதற்குப் பதில், நாம் வாங்க நினைக்கும் தங்க எடைக்கு நிகரான தங்கப் பத்திரத்தை வாங்கலாம். இதற்கு ஆண்டுக்கு 2.75% வட்டி கிடைக்கும். இந்த தங்கப் பத்திரத்தை யாராவது களவாடினால்கூட அவர்களால் அதைப் பணமாக்கிக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதே எடைக்குத் தங்கமாகவோ பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம். வாங்கிய சில காலத்துக்குப் பிறகு இதை வங்கியில் அடமானம் வைத்துக் கடனும் வாங்கிக்கொள்ளலாம், விற்கவும் செய்யலாம்.

வீடுகள், கோயில்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றில் இருக்கும் தங்கத்தின் அளவு தோராயமாக 20,000 டன்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்குத் தங்கம் அரசுக்குக் கிடைத்தால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்ளலாம். இறக்குமதிக்குத் தேவைப்படும் அந்நியச் செலாவணியை வேறு பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். வெளிவர்த்தகப் பற்று வரவும் கணிசமாகக் குறையும்.

அனைத்து அரசியல் கட்சிகள், சமூகக் குழுக்கள், தங்க வியாபாரிகள், பொற்கொல்லர்கள் என்று இதில் தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரின் கருத்துகளையும் கேட்பது இத்திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து முன்னேற்றம் காண உதவும். கருப்புப் பணத்தைத் தங்கமாக மாற்றி மேலும் லாபம் சம்பாதிக்க நினைப்போருக்கு இடம் தரக் கூடாது. இந்தத் திட்டம் வெற்றி பெற வட்டி வீதத்தை மேலும் உயர்த்த வேண்டும். வருமான வரி விதிப்பை 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட வேண்டும். மக்கள் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.

Source:Tamil Hindu

Saturday, October 31, 2015

ராஜதந்திரப் பின்னடைவு!

ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா நெருக்கம் வளர்க்கும் அதேவேளையில் நேபாளம் நம்மை விட்டு விலகிச் செல்கிறதோ என்று தோற்றமளிப்பதுபோல, சீனாவிடம் பெட்ரோலியப் பொருள்களை வாங்குவதற்கு நேபாள அரசு சில நாள்களுக்கு முன்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருள்களின் அளவு எவ்வளவு, என்ன விலை கொடுத்து வாங்க இருக்கிறார்கள் என்ற விவரங்களை நேபாள அரசு வெளியிடவில்லை. ஆனால் முதல் கட்டமாக, 1,000 டன் பெட்ரோலியப் பொருள்களை சீனா உடனடியாக வழங்கவுள்ளது. இதன் மூலம், பல பதின் ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருள்களை நேபாளத்துக்கு வழங்கி வந்த வணிகத் தனித்தன்மையை இந்தியா இழக்கத் தொடங்கியுள்ளது. தற்போது நேபாளத்துடன் சீனா நெருங்கி வரத் தொடங்கியிருப்பதன் அறிகுறிதான் இந்த ஒப்பந்தம்.
இந்திய எண்ணெய் நிறுவனமாகிய ஐ.ஓ.சி. மூலமாக ஆண்டுக்கு 137 கோடி லிட்டர் பெட்ரோலியப் பொருள்களை 100 கோடி அமெரிக்க டாலருக்கு நேபாளத்துக்கு இந்தியா விற்பனை செய்து வந்தது. நீர்மை எரிவாயு உருளைகளை விநியோகம் செய்வதில் உள்ள பொருள் விரயத்தைத் தவிர்க்க, நேபாள - இந்திய எல்லையில் 41 கி.மீ. தொலைவுக்கு எரிவாயு கொண்டு செல்ல குழாய் அமைக்கும் திட்டமும் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி நேபாளம் சென்றிருந்தபோது கையெழுத்தானது. இந்நிலையில், சீனாவுடனான நேபாளத்தின் ஒப்பந்தம் வணிக ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, சீனாவின் நெருக்கம் நமக்குத் தேவையற்ற சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம் அண்மையில் நிறைவேற்றிய அரசியல் சாசனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குள்ள மக்கள் குறிப்பாக மாதேஸிகள் நடத்திய ஆர்ப்பாட்டம், மறியல் காரணமாக இந்தியாவால் பெட்ரோலியப் பொருள்கள் அனுப்ப இயலவில்லை. அதனால், நேபாளம் பெட்ரோலியப் பொருள்கள் பற்றாக்குறையில் ஸ்தம்பிக்க நேர்ந்தது.
நேபாளத்தில் நடைபெற்ற கலவரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், சாலைகளில் நேர்ந்த தடைகளை நீக்கும் பொறுப்பும் அந்த நாட்டு அரசுக்குத்தான் உள்ளது. இந்தியா இதில் செய்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, பெட்ரோலியப் பொருள்கள் வழங்கக் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடு அல்ல. வழங்க இயலாத சூழல் நிலவியது. நேபாளத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்திருந்தது என்பதே உண்மையான காரணம் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தியா இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், நேபாளத்தின் இன்றியமையாத் தேவைக்கான பெட்ரோலியப் பொருள்களை விமானத்தின் மூலம் அனுப்பி, தேவையைச் சமாளிக்க உதவி செய்திருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம்.
இந்தியாவின் அறிவிக்கப்படாத பெட்ரோலியத் தடை என நேபாள ஊடகங்கள் விமர்சித்தன. நேபாளப் பிரதமராக கே.பி. சர்மா ஒலி பொறுப்பேற்றவுடன், சீனாவிடம் பெட்ரோலிய விவகாரம் குறித்துப் பேச அதிகாரிகளை அனுப்பியபோதே, இந்தியா நிலைமையைப் புரிந்துகொண்டு, பெட்ரோலியப் பொருள் பற்றாக்குறையைத் தீர்ப்பதில் முனைப்புக் காட்டியிருக்க வேண்டும்.
காத்மாண்டுவில் நேரிட்ட நிலநடுக்கம் காரணமாக சிதைவுற்ற நகரங்களைச் சீரமைக்கும் பணிகள் முடியாத நிலையில் இத்தகைய பெட்ரோலியப் பொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால்தான், நேபாளம் சீனாவிடம் செல்ல நேர்ந்துள்ளது.
ஆனால், சீனாவிலிருந்து பெட்ரோலியப் பொருள்களை நேபாளத்துக்கு கொண்டு வருவது மிகமிகக் கடினமானது. உலகின் மிக உயர்ந்த மலைப் பாதைகள் வழியாகத்தான் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும். இது அத்தனை எளிதான செயல் அல்ல.
சீனாவிடம் ஒப்பந்தம் போட்டாலும், தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே சீனாவிடமிருந்து பெறக்கூடும். இந்தியாவிலிருந்து பொருள்கள் நேபாளத்துக்குச் செல்வதுதான் எளிதான முறையாக இருக்கும். தற்போது, நேபாளத்துக்கு வழக்கமாக அனுப்பப்படும் பெட்ரோலியப் பொருள்களில் 40% அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வாறு அதிகரிக்க வேண்டும். நாம் பழையதுபோல நேபாளத்துக்கு முழுமையாகப் பெட்ரோலியப் பொருள்களை வழங்கும் நிலைமையை இந்தியா உருவாக்க வேண்டும்.
நேபாளத்தில் பல புனல்மின் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி செய்துள்ளது. அந்நாட்டிடமிருந்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்கள் உள்ளன. தற்போது பெட்ரோலியப் பொருள்களில் சீனா பங்குகொள்ள வந்திருக்கும் சூழலில், இதுபோன்று நேபாள மேம்பாட்டுத் திட்ட முதலீடுகளிலும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டால், நேபாளத்தில் சீனாவுடன் போட்டி போட வேண்டிய நிலை இந்தியாவுக்கு உருவாகும்.
இலங்கையின் பெட்ரோலியப் பொருள் சுத்திகரிப்பில் இந்தியா கணிசமான பங்கு வகிக்கிறது. தற்போது நேபாளத்தில் நேர்ந்துள்ளதைப் போன்று இலங்கையிலும் சீனா தனது வணிக உத்திகளைக் கையாளும் எனில், நம்மைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளிடையே நமக்கு நட்பும், வணிகப் பரிமாற்றமும் மளமளவெனச் சரியும்.
இந்தியா இனியும் தாமதிக்காமல் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டால், சீனாவை இமயத்துக்கு அப்பாலேயே இருக்கச் செய்யலாம்.
நேபாளமும், பூடானும் இந்தியாவின் பிரிக்க முடியாத நண்பர்கள். அவர்கள் விலகிச் செல்வது, இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு ஏற்படும் மிகப்பெரிய பின்னடைவு!

பருவநிலை மாற்றம்: இலக்கை எட்டமுடியும் என்று ஐநா நம்பிக்கை

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை உள்ளடக்கிய தனது ஆய்வறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது.

இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மிகவும் விரிவான யோசனைகளைக் கொண்டதாக இந்த அறிக்கை பார்க்கப்படுகின்றது.

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுதிமொழிகளை அளித்துள்ள பெரும் எண்ணிக்கையிலான செல்வந்த மற்றும் வறிய நாடுகளின் விபரங்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

தங்களின் பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்தப்பட்டாலும் புவியின் வெப்பநிலை அபாயகரமான எல்லையை தாண்டிச் செல்லக்கூடும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.

ஆனால், தங்களின் யோசனைகள் முக்கிய முன்னேற்ற நகர்வு என்று கூறியுள்ள ஐநா, இலக்குகள் இன்னும் எட்டப்படக்கூடிய நிலையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பில் உலகளாவிய ரீதியில் புதிய உடன்பாடு ஒன்றை எட்டும் முயற்சியாக வரும் டிசம்பரில் பாரிஸில் நடக்கவுள்ள மாநாட்டை முன்னிட்டே இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source:BBC Tamil

அமெரிக்காவை ரஷ்யர்கள் வெறுப்பது ஏன்?

ஆகஸ்ட் மாதத்தின் வெதுவெதுப்பான மாலை நேரத்தில், மாஸ்கோவின் ‘பெவெர்லி ஹில்ஸ் டைனர்’ உணவகத்தில், மூன்று இளம் ரஷ்யர்களுடன் அமர்ந்திருந்தேன். ‘போர்க்கி தி பிக்’ மற்றும் மர்லின் மன்றோவின் ஆளுயர உருவங்கள் போன்ற அற்புதமான அலங்காரப் பொருட்கள் நிறைந்த உணவகம் அது.

“அமெரிக்கா எங்களை வளைக்கப் பார்க்கிறது” என்றார் 29 வயதான கிறிஸ்டினா டோனெட்ஸ், டெஸ்ஸெர்ட் வேஃபில் துண்டு ஒன்றில் வாழைப்பழ கலவையைப் பரப்பியபடி. “பல பிரச்சினைகளைத் தாண்டி நாங்கள் எழுந்து நிற்கிறோம். உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) அது பிடிக்கவில்லை” என்றார் அப்பெண்.

பத்தாண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்குப் பிறகு, ரஷ்யாவில் செய்தி சேகரிப்பது என்பது பழைய நண்பரை மீண்டும் சந்திப்பது போல் இருந்தது. ஆனால், அந்த ‘பழைய நண்பர்’ நிறையவே மாறியிருந்தார்.

சில வகைகளில், நல்ல விதமான மாற்றங்கள்! சமீபத்தில் ரூபிளில் ஏற்பட்டிருந்த சரிவு மற்றும் பண வீக்கம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், ரஷ்யர்கள் வளம் மிக்கவர்களாகியிருக்கிறார்கள். நிறைய பயணம்செய்கிறார்கள். 1997-ல் முதன்முதலாக நான் மாஸ்கோ சென்றபோது என்னை உபசரித்த அன்பான அந்த ரஷ்யப் பெண், ‘இனிமேல், பிளாஸ்டிக் பைகளைக் கழுவ வேண்டியிருக்காது’ என்று இம்முறை சொன்னார். நான் கடைசியாக அவரைப் பார்த்ததற்குப் பிறகு, அவரது சம்பளம் 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. முதன்முதலாக வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றுவந்தார் துனீசியாவுக்கு!

வெறுப்புப் பட்டியல்

அதேசமயம், இருண்ட பக்கங்களும் உண்டு. ரஷ்ய சமுதாயம் முன்பை விட தற்காப்பு கொண்டதாகவும், அதீத சுய பிரக்ஞை கொண்டதாகவும் மாறியிருக்கிறது. அரசியல் தொடர்புள்ள ரஷ்ய செல்வந்தர்களில் பலர் லண்டனில் ஒரு வீடும், இரண்டாவது பாஸ்போர்ட்டும் வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது என் ரஷ்ய நண்பர்கள் பலர் வெளியேறும் வழியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ரஷ்யாவில் பல வெறுப்பு இலக்குகள் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உக்ரைன்கார்கள், தன்பாலின உறவாளர்கள், ஐரோப்பாவின் பால் பொருட்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா!

“தனது ஜனநாயகத்தை எங்கள் முகத்தில் அப்புகிறது” என்று கோபமாகச் சொன்னார் நிஸ்னி நோவ்கோரட் நகரைச் சேர்ந்த கோஸ்த்யா எனும் டாக்ஸி ஓட்டுநர். தன்பாலின திருமணத்துக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால் அதிருப்தியடைந்த ரஷ்யர்களில் ஒருவர் அவர். “எதற்கெடுத்தாலும் ‘சரி!’ ‘சரி!’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறீர்கள். சில சமயங்களில் ‘இல்லை’ என்றும் சொல்ல வேண்டும்” என்று சொன்ன நிஸ்னி, அமெரிக்காவை எதிர்க்கும் நிலைப்பாட்டை இறுதியாக ரஷ்யா எடுத்திருக்கிறது என்று விளக்கினார்.

பழைய பகை

இதுபோன்ற கருத்தாக்கங்களுக்குப் பின்னால் ஏகப்பட்ட வரலாறு இருக்கிறது என்பது உண்மைதான். 19-ம் நூற்றாண்டில் ரஷ்யாவின் சரியான பாதை எது என்பதில் ஸ்லாவோபைல்களும் வெஸ்டர்னைஸர்களும் மோதிக்கொண்டனர். சோவியத் ஒன்றியம் இருந்த காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான பகை இருந்ததில் வியப்பில்லை. அப்போதிலிருந்து, அமெரிக்காவின் உலக நடவடிக்கைகளின் அடிப்படையில் அதன் மீது பல எதிர்மறைக் கருத்துகள் நிலவுகின்றன. 1999-ல் செர்பியா மீது நேட்டோ படைகள் குண்டு வீசிய சம்பவம், இராக்கில் அமெரிக்கப் படைகள் ஊடுருவிய சம்பவம் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, அமெரிக்காவைப் பற்றிய ரஷ்யர்களின் தற்போதைய கருத்து, 24 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதற்குப் பிறகு மேலும் மோசமடைந்திருக்கிறது என்று மாஸ்கோவின் ‘லெவாடா அனல்ட்டிக்கல் சென்டர்’ தெரிவிக்கிறது.

அமெரிக்காவுக்கு எதிரான மனப்பான்மை தற்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. ஏனெனில், பல வகைகளில் ரஷ்ய அரசே இதை ஆதரிக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றிய சுதந்திரமான குரல்கள் எல்லாம் ரஷ்யத் தொலைக்காட்சி சேனல்களில் காணாமல் போய்விட்டன. ரூபிளில் ஏற்பட்டிருக்கும் சரிவு, பொதுப் போக்குவரத்தில் முதியோருக்கான மானியம் ரத்து என்று உள்நாட்டுப் பிரச்சினை எதுவானாலும், அதற்கு அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதல்தான் காரணம் என்று நம்பப்படுகிறது. எங்கு அரசியல் ஸ்திரத்தின்மை ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும் சித்தரிக்கப்படுகிறது.

மாபெரும் மாற்றம்!

“நாம் எல்லோரும் எப்படி வாழ்கிறோம் என்று அவளிடம் எடுத்துச் சொல். ஐரோப்பாவை விட சிறப்பாக நாம் வாழ்வதையும், க்ரீமியா இப்போது எத்தனை அற்புதமாக இருக்கிறது என்றும் அவளுக்குச் சொல்” என்று நான் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் ஒரு பெண் முணுமுணுத்தார். கடந்த ஆண்டு ரஷ்யாவால் இணைக்கப்பட்ட க்ரீமியா தீபகற்பத்தைக் குறிப்பிடுகிறார் அப்பெண். ரஷ்யாவில் நான் எதிர்கொண்ட மற்றொரு மாபெரும் மாற்றம் அது.

க்ரீமியா தொடர்பான புதினின் நடவடிக்கைகளால் ரஷ்யாவுக்குள்ளேயே பல குடும்பங்கள் பிரிந்துவிட்டன. பல உறவுகள் முறிந்துவிட்டன. சோவியத் ஒன்றியம் சிதறுண்ட நிகழ்வுக்குப் பின்னர், மேற்குலக நாடுகளு டனான உறவில் பெரும் விரிசல் விழுந்ததற்கும் க்ரீமியா விவகாரம் ஒரு காரணமாகிவிட்டது.

ரஷ்யாவின் மிகப் பெரிய திட்டம் என்ன? அப்படி எதுவும் இல்லை என்று முற்போக்கான ரஷ்யர்களில் பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அடுத்தடுத்த பிரச்சினைகளால் புதினும் அவரது நெருங்கிய வட்டாரத்தினரும் சோர்வடைந்திருக்கிறார்கள். இறக்குமதி உணவுகளுக்கு ரஷ்யா விதித்த தடையால் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் க்ரீமியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்திருக்கிறது. புதிய சமூகப் பொறுப்புகளால் ரஷ்யா சோர்வடைந்திருக்கிறது.

உள்ளூர் விமர்சனக் குரல்கள்

அரசு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்றும் தேசிய வாத முழக்கங்கள் ஒரு கெட்ட சகுனத்தைக் காட்டுகின்றன என்றும் சிலர் கருதுகிறார்கள். புதினின் ஆதரவாளர்களைச் செழிப்பூட்டிக்கொண்டிருந்த எண்ணெயின் விலை சரிந்திருக்கிறது.

“ரஷ்ய நிலம் தகித்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார் முன்னாள் பத்திரிகையாளரும், அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துவருபவருமான எனது நண்பர் ஒருவர். “ரோமானிய நகரமான போம்பேயி எரிமலைச் சீற்றத்தில் அழிவதற்கு முன்னர், அனைத்து வளங்களும் வறண்டுவிட்டதைப் போன்ற நிலைமை இது” என்றார் அவர்.

அமெரிக்காவைப் பற்றிய மோசமான மதிப்பீடு நிரந்தரமான ஒன்றல்ல என்று சொன்னார் ‘லெவாடா அனல்ட்டிக்கல் சென்டர்’ கருத்துக் கணிப்பு மையத்தின் இயக்குநர் லெவ் குட்கோவ். ரஷ்யர்களின் தற்போதைய கோபம் கூட அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிரானது அல்ல என்றும், தங்கள் மீதே தங்களுக்கு இருக்கும் கோபம் என்றே தோன்றுகிறது.

இதெல்லாம் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்று ஒரு முக்கியக் கேள்வி எழுகிறது. ரஷ்யாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று நினைப்பதாகச் சொல்கிறார் அலெக்சாண்டர் யெரெமெயேவ். “ரஷ்யாவில் தொழில் செய்வது நல்ல விஷயம் என்கிறார்கள் என் நண்பர்கள். ஆனால், அவர்களிடம் இருக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள்!”

Source:The Hindu Tamil

Tuesday, October 13, 2015

மரபுசாரா எரிசக்தி: தேவையும் அவசியமும்

ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது செயல்திட்டத்தை, இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின், மாசு வெளியேற்ற அளவு 2030-க்குள் 33 முதல் 35 சதவீதம் வரை குறைக்கப்படும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. மாசு இல்லாத எரிசக்தியின் அளவை 40% உயர்த்துவது எனவும், இந்த இலக்கை அடைய வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் 175 கிகா வாட் (1 கிகா வாட்=1000 மெகா வாட்) அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் செயல்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மக்கள் தங்களின் வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதால் மின் சாதனப் பொருள்களின் தேவையும் அதிகரித்து வருகின்றன. இதனால் மின்சாரத்தின் தேவையும், எரிபொருளின் தேவையும் அதிகரித்து வருகிறது. மின் தேவையைப் நிறைவு செய்வதில் அனல் மின் உற்பத்தி முறையே முதலிடம் வகிக்கிறது. அனல் மின் உற்பத்திக்கு மூலப்பொருளாக நிலக்கரி உள்ளதால், அவற்றை எரிக்கும்போது பெருமளவு கரியமில வாயு வெளியேறி காற்றில் கலக்கின்றது. அதுபோல் வாகனப் பயன்பாட்டுக்கு பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றை வாகனங்களில் பயன்படுத்தும் போது அவற்றிலிருந்து கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்ûஸடு, கார்பன் மோனாக்ûஸடு உள்ளிட்ட வாயுக்கள் வெளியேறி காற்றில் கலக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்டவை தீர்ந்து விடும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் தேவையில் இந்தியா 80 % இறக்குமதி செய்கிறது. இதனால் ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் கோடி அன்னியச் செலாவணி இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், மின் தேவையை நிறைவு செய்து கொள்ள மரபு சாரா ஆதாரங்களிலிருந்து எரிசக்தி முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்துவது ஒன்றே சரியான தீர்வாக அமையும். இந்தியாவில் மாற்று எரிசக்தியைத் தயாரிக்க ஏராளமான வளங்கள் உள்ள நிலையில், அதை முழுமையாகப் பயன்படுத்த உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக, மரபு சார்ந்த எரிசக்தி முறைகளிலேயே அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர்மின் சக்தி, அனல் மின் சக்தி, அணு மின்சக்தி ஆகியவை மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகளாகும். காற்றாலை மின் உற்பத்தி, சூரிய சக்தி, கடலலை மின் உற்பத்தி, பயோகேஸ் மின் உற்பத்தி, சாண எரிவாயு மின் உற்பத்தி, பயோமாஸ் மின் உற்பத்தி உள்ளிட்டவை மரபு சாரா மின் உற்பத்தி முறைகளாகும். இயற்கையாக வீசும் காற்றின் திசைக்கு ஏற்ப காற்றாலை இயந்திரங்களை அமைத்து அவை சுழலுவதிலிருந்து கிடைக்கும் இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுவது காற்றாலை மின் உற்பத்தி முறையாகும்.
சூரிய சக்தியிலிருந்து பெறப்படும் பயன்கள் இருவகையானவை. 1. சூரிய வெப்ப சக்தி சாதனங்கள், 2. சூரிய ஒளி மின் அமைப்புகள். இதில் சூரிய வெப்பச் சாதனங்களாக சூரிய அடுப்பு, சுடுநீர் சாதனங்கள், உலர்த்திகள் போன்றவற்றைக் கூறலாம். சூரிய ஒளி மின்சக்தியானது, சூரிய ஒளி மின் செல்கள் மூலமாக மின்சாரமாக மாற்றப்பட்டு பல்வேறு மின் சாதனங்களை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடலலை மின் உற்பத்தியானது கடலில் ஏற்படும் அலையினால் உண்டாகும் அழுத்தத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் முறையாகும்.
பயோகேஸ் மின் உற்பத்தி முறையில், வீணாகும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் கழிவுகளை நொதிக்கச் செய்து, கிடைக்கும் உயிரி வாயு (பயோகேஸ்) மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
மரக் கழிவுகள், தாவரக் கழிவுகளை உலர்த்தி, அவற்றை எரித்துக் கிடைக்கும் வெப்ப ஆற்றலிலிருந்து பயோ மாஸ் மின் உற்பத்தி முறை மேற்கொள்ளப்படுகிறது. மின் உற்பத்திக்கு மரபு சாரா முறைகள் உள்ளதுபோல், பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனாலும், டீசலுக்கு மாற்றாக பயோ டீசலும் பயன்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பெட்ரோல், டீசலுடன் கலந்தும் பயன்படுத்தலாம். இதனால் அதற்கான செலவு குறைவதுடன், சூழல் சீர்கேடும் குறையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவில் எத்தனால் உற்பத்தி செய்ய முயற்சித்தால் பெட்ரோலை எரித்து வெளியேறும் மாசு உள்ளிட்ட பாதிப்புகள் நேராமல் தடுக்கலாம்.
பயோ டீசலானது காட்டாமணக்கு, புங்கன் உள்ளிட்ட விதைகளிலிருந்தும், சமையல் எண்ணெய்யிலிருந்தும் உற்பத்தி செய்யலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சோளம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை எத்தனால், பயோ டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தினால் அதுசார்ந்த உணவுத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வேளாண் நிலப்பரப்பு குறைந்து வரும் நிலையில் பயோ டீசலுக்கு விளைச்சல் நிலம் ஒதுக்குவது உணவு உற்பத்தியை பாதிக்கும் என்ற நிலை உள்ளது. உணவு உற்பத்தியைப் பாதிக்காத வகையில், அதேசமயம், அதிகளவு எண்ணெய் கிடைக்கும் வகையில் காட்டாமணக்கை கண்டறிய முயற்சிக்கலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் அதிகளவில் எண்ணெய் தரக்கூடிய சத்ரபதி என்ற காட்டாமணக்கை உருவாக்கியது. இந்த விதைகளிலிருந்து 49.2% எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் பயிரிட ஏற்றது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2030-க்குள் மாசு வெளியேற்ற அளவு 35 சதவீதம் வரை குறைக்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மரபு சாரா எரிசக்தி மூலமான பயன்பாட்டை படிப்படியாக அதிகரிக்க முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.

Courtesy:Dinamani

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION NOTIFICATION NO: 17 /2015 DATED:12.10.2015

Applications are invited only through online mode upto 11.11.2015 for admission to the
Written Examination for direct recruitment against the vacancies for the years 2014-2015 and
2015-16 in the following posts included in Combined Civil Services Examination–II
(Non-Interview Posts) (Group-II A Services) [Service Code No.004]

Candidates have to Register their basic particulars through One - Time Registration which is
mandatory on payment of Rs. 50/- towards registration fee.

Date of Written Examination:27.12.2015(10:00 A.M. to 1:00 P.M).

For further details refer http://www.tnpsc.gov.in/latest-notification.html

Sunday, October 11, 2015

Great expectations in Sri Lanka

The unanimous adoption of a resolution by the United Nations Human Rights Council on Sri Lanka last week is notable for the pragmatism that informs it. The idea of an external investigation into the conduct of the military and the political leadership has been bearing down on the island nation for some years now. The erstwhile Rajapaksa administration responded with defiance and belligerent opposition to any move towards accountability, except one that was formulated and executed by the government on its own terms. The moves tended to divide the international community on whether to bail out Sri Lanka or come down on it. In a welcome departure from this trend, countries have come together and adopted, with Sri Lanka’s consent and participation, a resolution that emphasises justice and accountability for excesses committed by both sides, especially in the last phase of the civil war; on a political process to devolve power to the ethnic minorities; and an overall commitment to strengthen governance and democracy and end what many thought was an atmosphere of impunity. The political transformation that this year’s presidential and parliamentary elections ushered in is the main reason for the international community to have come together to aid Sri Lanka in a much-needed process of self-rejuvenation. Its democratic institutions and instruments of governance require a systemic overhaul after having been undermined by the previous regime. This factor has obviously impelled the world to encourage the present Sirisena-Wickremesinghe dispensation by means of a consensus resolution rather than weaken the government’s domestic popularity by imposing an intrusive mechanism.
However, the road ahead will not be smooth. A credible judicial mechanism will have to be evolved and foreign resources such as judges and prosecutors will have to be incorporated with care. An investigation process that inspires the confidence of victims to come forward and depose will have to be put in place. Fixing command responsibility for the bombing of civilians and the execution of those who surrendered, especially on political functionaries and their family members, is not going to be easy and must be marked by due process. The challenge is much bigger than the one relating to finding a political solution. For some, the idea of a judicial mechanism that includes foreign judges to investigate and prosecute perpetrators of war crimes and other offences may seem to fall short of the international inquiry of the sort they favour. To others, it is a rare opportunity to address several issues that defy a solution. A fair conspectus of assumptions underlying the Human Rights Council resolution is that it promotes reconciliation and truth-seeking and may lead to a sense of closure for the victims and a possible guarantee of non-recurrence, and that it opens up yet another opportunity for a political solution. These expectations cannot be belied.

Source:The Hindu