Friday, August 13, 2010

ஓமந்தூரார் வளாகத்தில் மேல்சபை உறுப்பினர்களுக்கு 10 மாடி குடியிருப்பு

தமிழ்நாட்டில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேல்சபை உருவாக்கப்படு கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 78 பேர் மேல்சபை உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இதில், 26 பேர் சட்டசபை உறுப்பினர்கள் மூலமும், 26 பேர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலமும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கான இடத்தில் 7 பேரும், பட்டதாரிகள் சார்பில் 7 பேரும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். 12 பேர் நியமன உறுப்பினர்கள்.

இவர்களை கவர்னர் நியமனம் செய்வார். மேல்சபை உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்களுக்கான குடியிருப்பு சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ளது. இது போல், மேல்சபை உறுப்பினர் களுக்கும் ஓமந்தூரார் தோட்ட வளாகத்திலேயே குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

10 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 100 வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீடும் 985 சதுர அடி பரப்பளவு கொண்டதாக அமையும். சுமார் 1.4 ஏக்கரில் கட் டப்படும் இந்த குடியிருப்பை ரூ.34.4 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இதற்கான திட் டத்தை தயாரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக கட்டிடவியல் நிபுணர்கள் 10 மாடி குடியிருப்புக்கான கட்டிடத்தை உருவாக்குவது மற்றும் அதன் வடிவமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபடு கிறார்கள்.

மேல்சபை உறுப்பினர்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்கான ஆவணங்களை, சில தினங் களில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்ப டைக்கிறது. அனுமதி கிடைத்த வுடன் 18 மாதங்களில் கட்டி டத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment