இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் “சூப்பர் பக்” எனும் புதுவகை பாக்டீரியா கிருமி பரவி உள்ளதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.
அந்த புதுவகை பாக்டீரியாவுக்கு அவர்கள் புதுடெல்லி பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே “சூப்பர் பக்” கிருமியை ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் சென்னை தரமணியில் உள்ள ஏ.எல். முதலியார் முதுநிலை அடிப்படை மருத்துவ ஆய்வு மையத்தில் படித்தவர். தற்போது லண்டனில் இங்கிலாந்து விஞ்ஞானி டிமோத்தி வால்சுடன் சேர்ந்து சூப்பர் பக்கிருமி பற்றி விரிவான ஆய்வு செய்து வருகிறார்.
விஞ்ஞானி கார்த்திகேயன், தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து கூறியதா வது:-
சூப்பர் பக்கிருமி பற்றி உலகின் பல நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் சூப்பர்- பக்கிருமிக்கு ஒவ்வொரு பெயர் வைத்துள்ளனர்.
ஐரோப்பிய விஞ்ஞானிகள் மட்டும்தான் சூப்பர்- பக்கிருமிக்கு புதுடெல்லி பெயரை சேர்த்து வைத்துள்ளனர். இது தொடர்பாக எனது ஆய்வறிக்கை திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி பேசி வருகிறேன்.
சூப்பர்- பக்கிருமி பற்றி 6 மாதங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்தியாவில் இருந்து இந்தகிருமி பரவியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
சூப்பர் பக்கிருமி எந்த மருந்துக்கும் கட்டுப்படாது என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அதை கட்டுப்படுத்தி விட முடியும். எனவே சூப்பர்-பக் கிருமிபற்றி பயம் வேண்டாம்.
சூப்பர்- பக்கிருமி பற்றி தொடர்ந்து நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் அதற்குரிய மருந்துகண்டு பிடிக்கப்படும்.
இவ்வாறு விஞ்ஞானி கார்த்திகேயன் கூறினார்.
No comments:
Post a Comment