Monday, August 30, 2010

நேபாள எப்.எம். (பண்பலை) ரேடியோக்கள் வாயிலாக இந்தியாவிற்கு எதிராக மாவோயிஸ்டுகள் விஷமபிரசாரம்?

நேபாள எம்.எம். ரேடியோ வாயிலாக இந்தியாவுக்கு எதிராக மாவேயிஸ்ட்கள் விஷமப்பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவின் பீகார், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் இத்தகைய நேபாள எம்.எம். ரேடியோக்கள் பரவலாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும், இதனை முறியடிக்க இம்மாநிலங்களில் கூடுதல் இந்திய எப்.எம். ரேடியோ நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பீகார், உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நேபாள நாட்டு எப்.எம். ரேடியோக்கள் மக்களிடையே நன்கு செல்வாக்கு பெற்றுள்ளன.இம்மாநிலத்தில் உள்ள கிராம, பழங்குடியின மக்கள் நேபாள எம்.எம்.ரேடியோக்களை விரும்பி கேட்கின்றனர். மேலும் நோபளத்தில் மாவோயிஸ்ட்டுகள் அந்நாட்டு அரசியலில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால். இந்த அமைப்புகள் நேபாள எம்.எம். (பண்பலை) ரேடியோ வாயிலாக இந்தியாவிற்கு எதிராக விஷமப்பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே இம்மாநிலங்கள் மாவோயிஸ்டுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் ரேடியோ வாயிலாக பரப்பப்படும் மாவோயிஸ்டு பிரசாரமாக ஓடுக்குவதற்கு மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இத்தகைய அனுமதியற்ற முறையில் ஓலிபரப்பப்படும் எப்.எம்.ரேடியோக்களை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தது. மேலும் நேபாள எப்.எம். ரேடியோக்களுக்கு போட்டியாக மத்திய அரசு இந்த மாநிலங்களில் கூடுதல் எப்.எம். ரேடியோ நிலையங்களை தொடங்க, அகில இந்திய வானொலிக்கு ரூ. 100 கோடியினை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒதுக்கியிருந்தது. இதே போன்று பாகிஸ்தான் டி.வி.சானல்கள் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும், இதனை முறியடிக்க இம்மாநிலத்தில் இந்திய டி.வி. சானல்கள் அம்மாநில குக் கிராமம் வரை தெரிவதற்காகக கூடுதல் சக்தி மிக்க டிரான்ஸ்மீட்டர் பொருத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment